Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. குமாரபாளையம் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட மகளிர் மற்றும் தொண்டரணி அமைப்பாளர் ராதிகா, துணை அமைப்பாளர் கயல்விழி தலைமை வகித்தனர்.
நகர வடக்கு அமைப்பாளராக தி.மு.க. தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட நகராட்சி தலைவர் விஜய்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தல், கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுதல், பூத் கமிட்டி அமைக்க உதவிடுதல், தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாமில் பொதுமக்களுக்கு உதவிடுதல், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிர் தொண்டரணியினர் பெருமளவில் பங்கேற்றனர்.